மவுனத்திற்கு ஒரு மொழி உண்டு,
மவுனம் மட்டுமே அறிந்த மொழி,
மனங்கள் மட்டுமே பேசும் மொழி,
மவுனத்தின் மொழி புரியாத வரை தான் சிக்கல் !
சில நேரம் மவுனம் கோபத்தின் வெளிப்பாடு,
சில நேரம் சந்தோஷத்தின் உச்ச நிலை !
சந்தோஷத்தில் பிறக்கும் மவுனம்
சாகித்ய சங்கீதம் பாடும் !
கோபத்தில் பிறக்கும் மவுனம்
சந்தோஷத்தையே சூறையாடும் !
வாதம் முற்றிப்போய் பிறக்கும் மவுனம்
போருக்குப் பின் வரும் அமைதி !
வாதமே இன்றிப் பிறக்கும் மவுனம்
உறங்கும் குழந்தையின் அமைதி !
சங்கடங்களை சமாளிக்க சிலநேரம்
சாந்தமாய் இருப்ப்போம் ஏனெனில்
மவுனம் மகிழ்ச்சிக்கான முதல் படி !!
– ஸ்ரீ