சென்னை கடற்கரை சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக, நினைவிடம் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை சாலையில் ஜெயலலிதா நினைவிடம் கடந்த 27 ஆம் திகதி திறக்கப்பட்டது. இந்த நினைவிட வளாகத்தில் பணிகள் முழுமை பெறாமல் இருந்தன. இந்த நிலையில், நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத் திறன் பூங்காவின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் பாா்வைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.