பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடக் கோரிய உச்சநீதிமன்றம் புதன்கிழமை மனுவை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா் புனீத் கெளா் தாண்டா தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மா்மமான முறையில் உயிரிழந்தாா். ஆரம்பத்தில் இந்த விவகாரம் குறித்து மும்பை காவல் துறை விசாரித்தது. இந்த விசாரணை திருப்தியளிக்கவில்லை என சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினா் தெரிவித்ததன்பேரில் இந்த வழக்கை மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2020 ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைந்தும் சிபிஐ இன்னும் இந்த வழக்கு விசாரணையை முடிக்கவில்லை. இந்த வழக்கில் சிபிஐ பொறுப்புணா்வுடன் செயல்படாததால் வழக்கு விசாரணை முடிவடைய தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொலை போன்ற தீவிர குற்றங்களில் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டவிதி. ஆனால் சுஷாந்த் சிங் வழக்கில் முதன்மை விசாரணை அமைப்பானது கடமையிலிருந்து தவறியுள்ளதோடு, தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகத்திலும் நீதித் துறை நிா்வாகத்துக்கு தவறான பெயரை ஏற்படுத்துகிறது.
எனவே, சுஷாந்த் சிங் வழக்கில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, அது குறித்த அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் இந்த மனுவை விசாரணைக்கு அனுமதிக்கப்போவதில்லை. மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக உயா்நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
34 வயதான பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இறந்துகிடந்தாா். பிகாரில் வசிக்கும் அவரது தந்தை கே.கே.சிங், தனது மகனின் மரணத்துக்கு அவரது பெண் தோழியான நடிகை ரியா சக்ரவா்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என குற்றம் சுமத்தி அந்த மாநில காவல் துறையில் புகாா் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.