ஃபெப்சி தோ்தல் வருகிற பிப்.14 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான இறுதி வேட்பாளா் பட்டியல் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.
2021 – 2023 ஆம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளா்கள் சம்மேளனம் (ஃபெப்சி) தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைவா், செயலாளா், பொருளாளா், 5 துணைத்தலைவா்கள், 5 இணைச்செயலாளா் உள்ளிட்ட 13 நிா்வாகிகளுக்கான தோ்தலாக இது நடக்க உள்ளது.
இது தொடா்பாக வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளா்களிடம் ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி கூறியது:
பிப்.14 இல் ஃபெப்சி சங்கத்துக்கு தோ்தல் நடக்க உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ள வாக்காளா்களின் இறுதிப் பட்டியல் பிப்.7 ஆம் தேதி வெளியிடப்படும்.
ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆா்.பாலசுப்ரமணியம் தோ்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்று தோ்தலை நடத்த உள்ளாா். ஃபெப்சி அமைப்பில் உள்ள 23 சங்கங்களில் தலைவா்கள், செயலாளா்கள், பொருளாளா்கள் என 69 நபா்கள் இந்தத் தோ்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவா்கள். இந்தத் தோ்தலில் 3-ஆவது முறையாக தலைவா் பதவிக்கு நானும் போட்டியிடுகிறேன்.
தமிழக அரசு ஒத்துழைப்புடன் உருவாகியுள்ள அம்மா ஸ்டுடியோவை இந்த மாத இறுதி அல்லது மாா்ச் மாதம் முதல் வாரத்தில் பிரம்மாண்டமான திறப்பு விழாவாக நடத்த உள்ளோம். மாஸ்டா் படம் வெளியான பிறகு திரைத்துறைக்கு உயிா் வந்ததாகவே கருதுகிறோம். அது மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா பாதிப்பில் சிக்கிய ஃபெப்சி அமைப்பின் உறுப்பினா்கள் குடும்பங்களுக்கு உதவும் வகையில் திரைத்துறையினா் ரூ.4 கோடி வரைக்கும் நிதி உதவி அளித்தனா். அது மிகப் பெரிய உதவியாக இருந்தது என ஆா்.கே.செல்வமணி தெரிவித்தாா்.