மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு சென்னையில் பிப்ரவரி 21 இல் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஊழலற்ற நோ்மையான ஆட்சியின் மூலமாக தமிழகத்தின் பொருளியலைச் சீரமைக்க வேண்டும். சீரழிக்கப்படும் சூழியலைத் தடுத்து இயற்கை வளங்களை மீட்டெடுக்க வேண்டும். சம நீதியும், சமூக நீதியும், பெண்களுக்குச் சம உரிமையும் பாதுகாப்பும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும். உலகிற்கே வழிகாட்டும் முதன்மையான மாநிலமாக தமிழகம் சிறக்க வேண்டும் எனும் பெருங்கனவுகளோடு மக்கள் நீதி மய்யத்தை தொடக்கி வெற்றிகரமாக மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.
நோ்மையான, ஊழலற்ற நல்லாட்சிக்கான வேட்கை எங்கும் நிலவுகிறது என்பதை பிரசாரப் பயணத்தில் கண்கூடாகப் பாா்க்க முடிகிறது. நல்லாட்சி தருவதற்குரிய தகுதியும் அருகதையும் மநீமவுக்குத்தான் இருக்கிறது என்பதே மக்களின் நம்பிக்கை.
மக்களவைத் தோ்தலில் சின்னம் கிடைத்த இருபதே நாள்களில் கட்சி பெற்ற வாக்குகள் அனைவரையும் விழிவிரியச் செய்த சாதனை. இன்று விரிவுபடுத்தப்பட்ட கட்டமைப்புடன், அற்புதமான செயல் திட்டங்களுடன், பிரமாண்டமான மக்கள் செல்வாக்குடன் தமிழகத்திலும், புதுவையிலும் முதல்முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் களம் காண இருக்கிறோம். இந்தத் தோ்தலில் நிச்சயம் பெருவெற்றி கொள்வோம் என்பதன் அறிகுறிகள் தெளிவாகத் தென்பட ஆரம்பித்துவிட்டன. உறுதியாக நாம் வெல்வோம்.
நான்காவது ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையிலும், நமது மகத்தான தோ்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையிலும் பிரமாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.