விஷாலின் ஆம்பள படத்தில் நடித்த நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் இயக்கத்தில் கமர்ஷியல் வெற்றியை கண்டது. விஷால், ஹன்சிகா, சதீஷ், வைபவ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண்,ஐஸ்வர்யா என்று பலர் நடித்த இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யாவின் மகளாக நடித்தவர் நடிகை மாதவி லதா. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் 2007 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இவர் தமிழில் ஆம்பள திரைப்படத்தில் மட்டும்தான் நடித்திருக்கிறார்.
இறுதியாக 2015-ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருந்தார் இதன் பின்னர் இதுவரை வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை. மேலும் இவர் கர்நாடக பாஜக முடியவில்லை. இணைந்து பல பிரச்சாரங்களை கூட செய்து வருகிறார்.மாதவி லதா அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தெலுங்கு சினிமா விருந்துகளில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் மாதவி லதா சைபராபாத் போலீசில் தனது புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்புவதாக புகார் அளித்துள்ளார். ஆந்திராவில் அவதூறு எதிராக நடக்கும் தாக்குதல்களை கண்டித்து பேசினேன். அதன்பிறகு மர்ம நபர்கள் வலைத்தளத்தில் என்னை மோசமாக திட்டி கருத்துகள் பதிவிடுகிறார்கள். எனது புகைப்படத்தை மார்பிங் செய்தும் பதிவேற்றி உள்ளனர். எனது நடத்தை பற்றியும் கேவலமாக பேசுகிறார்கள். இதனால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே நடிகை மாதவி லதா கடந்த 2018 ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவரும் மேலும் சில ஆண்களும் ஆண்டு சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யானை பற்றி பேசிய சர்ச்சை கருத்திற்கு எதிராக தெலுங்கு திரைப்பட சங்கத்திற்கு முன்பாக அமைதி போராட்டத்தை நடத்தினார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இவரையும் இவர் உடன் இருந்த சிலரையும் கைது செயது பின்னர் சிறிது நேரத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.