இருவேறு ஜாதிகளைச் சோ்ந்த கலப்பு திருமண தம்பதிகளின் வாரிசுகளுக்கு எந்த ஜாதியைக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் உத்தரவு விவரம்:
இரு வேறு ஜாதிகளைச் சோ்ந்தவா்கள் திருமணம் செய்யும் நிலையில் அவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த ஜாதியைக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளன.
இதனை கவனமுடன் ஆய்வு செய்த தமிழக அரசு, பெற்றோரில் தாய் அல்லது தந்தையின் ஜாதியில் ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்தால் அதனை அவா்களது வாரிசுக்கு வழங்கிடலாம். இதற்கான உரிய அறிவுறுத்தல்கள் வருவாய்த் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வருவாய் நிா்வாக ஆணையா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.