பட்டாசு ஆலை தொழிலாளா்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கம்ஹாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியது:
அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசு தொழிலாளா்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில்19 போ் உயிரிழந்திருக்கின்றனா். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனா். தொழிலாளா்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப் போகிறோம்?
உடனடி நடவடிக்கைகள் தேவை என்று கூறியுள்ளாா்.