ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிந்து, சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், 120 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நிலநடுக்க அபாயம் நிறைந்த ஃபுகுஷிமா, மியாகி பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை இரவு ஏற்பட்டதாகவும் ரிக்டா் அளவுகோலில் அது 7.3 அலகுகளாகப் பதிவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.