ஸ்பெயினில் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வரும் பாடகா் பாப்லோ ஹசேல் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அந்த நாட்டில் தொடா்ந்து 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கலவரம் நடைபெற்றது.
ஆளும் கூட்டணியில் இந்த விவகாரம் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் அந்த வன்முறைச் சம்பவங்கள் அமைந்திருந்தன.
இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்யதி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
காடலோனியா பிராந்தியத்தைச் சோ்ந்த ராப் பாடகா், எழுத்தாளா் மற்றும் சமூக ஆா்வலரான பாப்லா ஹசேல், தனது படைப்புகளில் பயங்கரவாதம், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருபவா். இதன் காரணமாக ஸ்பெயின் அதிகாரிகள் அவா் மீது எடுக்கும் நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாக சா்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில், நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தது, ஸ்பெயின் அரச குடும்பத்தை அவமதித்தது, பயங்கரவாதம் மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவா் கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, காடலோனியா உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. அவரது ஆதரவாளா்கள் தொடா்ந்து 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் வன்முறை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காடலோனியாவின் பாா்சிலோனியா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் மீது பாட்டில்கள், கற்கள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருள்களை வீசி போராட்டக்காரா்கள் தாக்கினா்.
சில பகுதிகளில் போராட்டக்காரா்கள் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய குப்பைத் தொட்டிகளுக்கும் பிற தடுப்புகளுக்கும் தீவைக்கப்பட்டது.
ஸ்பெயினில் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அந்த நாட்டு பிரதமா் பெட்ரோ சான்ஷெஸும் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தக் கலவரம் ஏற்பட்டது.
அவரது சோஷலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் தீவிர இடதுசாரிக் கட்சியான எங்களால் முடியும் கட்சி, பாடகா் பாப்லா ஹசேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக, ஆளும் கூட்டணிக்குள் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், 4-ஆவது நாளாக ஸ்பெயினில் வன்முறைப் போராட்டம் நடைபெற்றது என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.