நிலங்களில் வாழும் மனிதர்களைப் போல் இல்லாமல் காடுகளில் வாழும் விலங்கினங்களும், கடல் மற்றும் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் வாழும் மீன் இனங்களும் எப்போதுமே ஒற்றுமையாக வாழ்ந்து வருவது காலகாலமாக நிரூபணம் ஆகிவரும் பேருண்மையாக உள்ளது.
இந்நிலையில், மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் உள்ள புலாவ் தம்பிசன் கடலோர கிராமம் அருகே கடலுக்குள் மோதல் நடந்து வெளியே தூக்கி வீசப்பட்டதுபோல் ஒரே வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்கள் ஒரேநேரத்தில் கரையில் வந்து விழுந்து துள்ளி, துடிக்கும் பழைய வீடியோ காட்சி ‘யூடியூப்பில்’ பகிரப்பட்டுள்ளது.
இந்த மீன்களை உள்ளூர் மக்கள் அள்ளிச் செல்லும் காட்சியை கண்ட சிலர் கடலுக்குள் சுனாமி போன்ற தாக்கம் ஏற்பட்ட அதிர்ச்சியில் இவை இப்படி கரையை நோக்கி கும்பலாக வந்திருக்கலாம் என கருதுகின்றனர். வேறு சிலரோ, கடல் மீன்களிலும் சங்கரா, சீலா என சாதிப் பெயரைப் போல் பல பெயர்கள் இருப்பதால் சாதி மோதலின் விளைவாக ஒருவகை மீன்கள் மட்டும் கடலுக்குள் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று விமர்சிக்கின்றனர்.
இந்த வீடியோ பற்றி உங்களது கருத்து..?