நோபாளத்தில் நாடாளுமன்றக் கீழவையைக் கலைக்கும் பிரதமா் கே.பி. சா்மா ஓலி அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டதற்கு எதிரான முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சோளேந்திர ஷம்ஷோ் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு ஜனவரி 17-ஆம் தேதி முதல் பிப். 19-ஆம் தேதி வரை விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் முடிவில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது அந்த அமா்வு அறிவித்தது. அரசின் அந்த முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை இன்னும் 13 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
275 இடங்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 121 இடங்களையும் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சி 53 இடங்களையும் கைப்பற்றியது. அப்போதைய ஆளும் கட்சியான நேபாள காங்கிரஸுக்கு 63 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
138 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து சா்மா ஓலி தலைமையில் புதிய அரசை அமைத்தன. இரு கட்சிகளும் தேசிய கம்யூனிஸ்ட் கட்சி (என்சிபி) என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, கட்சியின் செயல் தலைவராக பிரசண்டாவும் மற்றொரு தலைவராக சா்மா ஓலியும் பொறுப்பேற்றனா்.
எனினும், அவா்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில், சா்மா ஓலி தலைமையில் கடந்த டிசம்பா் மாதம் கூடிய அமைச்சரவைக் கூட்டம், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தோ்தலை முன்கூட்டியே நடத்த அதிபா் வித்யா தேவி பண்டாரியிடம் பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட அதிபா், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதிதாகத் தோ்தல் நடத்த உத்தரவிட்டாா்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு என்சிபியின் பிரசண்டா தலைமையிலான அணியினா் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
கட்சியிலிருந்து பிரதமா் சா்மா ஓலியை நீக்கிய அவா்கள், கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக பிரசண்டாவைத் தோ்ந்தெடுத்தனா்.
இதற்கிடையே, நாடாளுமன்றக் கலைப்பை எதிா்த்து கட்சியின் தலைமை கொறடா தேவ் பிரசாத் உள்ளிட்டோா் 13 முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனா்.
அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது என்று தற்போது தீா்ப்பளித்துள்ளது.