‘தை பிறந்தாச்சு’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை பாபிலோனா. ‘காதலே நிம்மதி’, ‘என்னம்மா கண்ணு’ உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார்.
பாபிலோனாவும் தொழில் அதிபர் சுந்தர் பாபுல் ராஜூம் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவீட்டார் சம்மதத்தின் பேரில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் கிறிஸ்தவ முறைப்படி இன்று காலை 11 மணியளவில் இவர்களது திருமணம் நடந்தது. பாபிலோனா – சுந்தர் பாபுல் ராஜ் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பாதிரியார் எபினேசர் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இருவீட்டார் மற்றும் மணமக்களிடம் சம்மதம் கேட்டபிறகு புதுமண தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டனர். மணமகள் பாபிலோனாவின் தந்தை நாகராஜ், தாயார் தேவி, மணமகன் சுந்தர் பாபுல்ராஜின் தந்தை அலெக்சாண்டர், தாயார் எலன்ட்ரிஸ் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
மணமக்களை அபிராமி ராமநாதன் நல்லம்மை ராமநாதன், செந்தில், ருக்மாங்கதன், கவிதா ஸ்ரீ, அனுஷா உள்பட ஏராளமானோர் நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை நெல்லை சுந்தர் ராஜன் வரவேற்றார்.