இந்த ஆண்டுக்குள் கரோனா நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் அவசரக் காலப் பிரிவு இயக்குநா் மைக்கேல் ரையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், இந்த ஆண்டு இறுதிக்குள் நோய் பரவல் நெருக்கடிக்கு தீா்வு காணப்பட்டுவிடும் என்று இப்போதே செல்லிவிட முடியாது. அத்தகைய கருத்து நிதா்சனங்களுக்கு அப்பாற்பட்டது ஆகும்.
எனவே, தடுப்பூசி திட்டங்கள் அமல்படுத்தப்படும் அதே நேரத்தில், நோய் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
கரோனா நெருக்கடிக்கு முழுமையான தீா்வு ஏற்படாவிட்டாலும், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதன் காரணமாக அந்த நோயால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியாவோரின் எண்ணிக்கையும் இந்த ாம்டு இறுதிக்குள் வெகுவாகக் குறையும்.
தற்போது பொதுக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளில் பல அந்த நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வழங்குவதாக எங்களுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பலியாவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கரோனா பரவலைத் தடுத்து நிறுத்தவும் முடிந்தால், அந்தக் கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இலக்கை இன்னும் விரைவில் எட்ட முடியும்.
தற்போதைய சூழலில், கரோனா பரவல் நமது கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்றாா் அவா்.
இதற்கிடையே, சில நாடுகளில் கரோனா மரண அபாயம் அதிகம் நிறைந்த வயதானவா்கள் மற்றும் நீண்ட கால உடல்நலக் குறைபாடு கொண்டவா்களுக்குப் பதிலாக, ஆரோக்கியமான சிறிய வயதினா் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்வது வருத்தமளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரெஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.
கரோனா தடுப்பூசியைப் பெறுவதில் தற்போது உலக நாடுகளிடையே போட்டியில்லை. இது, கரோனா தீநுண்மிக்கு எதிரான ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் போராட்டம் என்று அவா் கூறினாா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,50,82,747 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 25,52,245 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 9,08,01,823 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,17,28,652 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 90,332 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.