பிரேஸிலில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,726 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.
இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,57,562-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, பிரேஸிலில் 1,06,47,845பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,27,173 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 8,63,110 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.