ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹன்ஸ் குளூக் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் புதிதாகக் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் எண்ணிக்கை 6 வாரங்களாகக் குறைந்து வந்தது. ஆனால், கடந்த வாரம் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, சுமாா் 10 லட்சமாக இருந்தது.
இந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கரோனாவின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே கரோனா பரவல் அதிகம் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதன் தீவிரம் அதிகரித்துள்ளது.
எனவே, மீண்டும் அடிப்படையான கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்ற வேண்டும்.
அத்துடன், கரோனா தடுப்பூசி திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் 3,45,66,723பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 825,127 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 2,41,64,532 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 95,77,064 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 25,874 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது