அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிறகு அங்குள்ள சீக்கியர்களை முஸ்லிம்கள் என தவறாக கருதி அடிக்கடி தாக்குதல் நடக்கிறது.
இந்த நிலையில் சிகாகோவில் வசித்து வந்த சீக்கியர் ஒருவரை கடுமையாக தாக்கி உள்ளனர். தாக்குதலுக்குள்ளான அவரது பெயர் இந்தர்ஜித்சிங் முக்கர். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அவர் தனது காரில் சென்றார்.
அப்போது மற்றொரு காரில் வந்த டிரைவர் இந்தர் ஜித்சிங்கை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு தாக்கினார்கள்.
இந்தர்ஜித்சிங் நீண்ட தாடி வைத்து இருந்தார். இதை பார்த்து அவரை பின்லேடன் என்று கூறி அந்த டிரைவர் தாக்கினார். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். முகத்தில் உள்ள எலும்பும் முறிந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
நாளை அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமாகும். இந்த நிலையில் சீக்கியர் மீது தாக்குதல் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.