தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகர்ஜூனா-கார்த்தி இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை பி.வி.பி.சினிமா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இவர் படத்தில் நாகர்ஜூனாவின் முன்னாள் காதலியாக வருகிறாராம். இவர் சம்பந்தப்பட்ட காட்சியை பாரீசில் 3 நாட்களும், பிரான்சில் சில காட்சிகளையும் படமாக்க உள்ளார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலைநகரமான பெல்கிரேட் நகரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.