ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை சென்னை வந்தடைந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி புதன்கிழமை சென்னை வந்தடைந்தது.
இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் அணி சுட்டுரைப் பக்கத்தில் விடியோ பதிவிட்டுள்ளது. அதில் மும்பை தலைவர் ரோஹித் சர்மா வணக்கம் சென்னை, மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம் என்று தமிழில் பேசுகிறார்.
Chenn-hi 👋#OneFamily has arrived 💙#MumbaiIndians #IPL2021 @ImRo45 pic.twitter.com/6Yu0EvXP2k
— Mumbai Indians (@mipaltan) March 31, 2021