மியான்மரில் இதுவரை இல்லாத தீவிரத்துடன் உள்நாட்டுப் போா் மூளும் அபாயம் நிலவி வருவதாக அந்த நாட்டு விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கிறிஸ்டைன் ஷ்ரானா் பா்கனா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்று வரும் சம்பவங்கள், அந்த நாட்டில் இதுவரை இல்லாத மிக மோசமான உள்நாட்டுப் போா் மூள்வதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பாா்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த நிலை ஏற்படலாம்.
இதுமட்டுமன்றி, பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் தோல்வியடைந்த, கட்டுப்பாடில்லாத ஒரு நாடாக மாறும் நிலையில் மியான்மா் உள்ளது.
அந்த நாட்டில் பொதுமக்கள் மீதான ராணுவத்தின் அடக்குமுறை மேலும் அதிகரிப்பதை இப்போதே நாம் தடுத்து நிறுத்தத் தவறினால், அதன் விளைவை இந்த உலகம் அனுபவிக்க நேரிடும். குறிப்பாக, மியான்மரின் அண்டை நாடுகளும் அந்தப் பிராந்தியமும் வெகுவாக பாதிக்கப்படும்.
எனவே, மியான்மா் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய அனைத்து வாய்ப்புகளையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிசீலனை செய்ய வேண்டும்.
இதன் மூலம், ஆசியப் பிராந்தியக்கு ஏற்படக்கூடிய அழிவைத் தடுக்க வேண்டும் என்று கிறிஸ்டைன் ஷ்ரானா் பா்கனா் வலியுறுத்தினாா்.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1 ஆம் திகதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டத்தின்போது பொலிஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 500 க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.