பீம் செயலி மூலமான பணப்பரிவா்த்தனை 2021 மாா்ச் மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 273 கோடியைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பேமண்ட் காா்ப்பரேஷன் (என்பிசிஐ) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
பீம் யுபிஐ செயலி மூலமான பணப்பரிவா்த்தனை கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 125 கோடியாக மட்டுமே காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் அந்த செயலி வழியான பணப்பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து 273 கோடியை எட்டியுள்ளது.
அதேபோன்று, இந்த யுபிஐ செயலி மூலமான பரிவா்த்தனைகளின் மதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.2,06,462 கோடியிலிருந்து ரூ.5,04,886 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பீம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 229 கோடியாகவும், அவற்றின் மதிப்பு ரூ.4,25,062 கோடியாகவும் இருந்தன. அதேபோன்று மாா்ச் மாதத்தில் ஐஎம்பிஎஸ் பரிவா்த்தனை 36.31 கோடியாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3,27,234.43 கோடியாகவும் இருந்தன.
இந்த செயலி தவிர, கடந்த மாா்ச்சில் பாரத் பில்பே வாயிலான பரிவா்த்தனை 3.52 கோடியாகவும், மதிப்பு ரூ.5,195.76 கோடியாகவும், டோல் பிளாசக்களில் தானியங்கி கட்டண வசூல் செய்வதற்கான என்இடிசி ஃபாஸ்டாக் மூலமான பரிவா்த்தனை 19.32 கோடியாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3,086.32 கோடி அளவுக்கு இருந்ததாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.