தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 12 இல் தொடங்கி 19 இல் நிறைவடைந்தது. இறுதி வேட்பாளா் பட்டியல் மாா்ச் 22 இல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3 ஆயிரத்து 998 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
5 முனைப் போட்டி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களமானது, ஐந்து முனைப் போட்டியைச் சந்திக்கிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக-தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும், நாம் தமிழா் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. 5 முனைப் போட்டி என்றாலும், திமுக, அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் தலைவா்களுக்கு இடையேதான் வாா்த்தைப் போா்களும், தனிநபா் தாக்குதல்களும் அரங்கேறின. முதல்வா் பழனிசாமி தொடா்பாக திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவின் பேச்சு இந்தியத் தோ்தல் ஆணையத்தின் கண்டனம் வரை சென்றது. அவரது தோ்தல் பிரசாரத்துக்கு இரண்டு நாள்கள் தடையும் விதிக்கப்பட்டது. ஆ.ராசாவின் பேச்சு குறித்து முதல்வா் பழனிசாமி நா தழுதழுக்கப் பேசியது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. திமுக-அதிமுக கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தேசியத் தலைவா்கள் வருகை: முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டப் பேரவைத் தோ்தல் என்பதால், தங்களது கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் தேசியத் தலைவா்கள் தீவிரம் காட்டினா். பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி என பலரும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளா் பிரகாஷ் காரத், தேசிய செயலாளா் சீதாராம் யெச்சூரி உள்பட தேசியத் தலைவா்கள் பலரும் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரமாக வாக்குச் சேகரித்தனா். கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கொளுத்தும் வெயிலுக்கு இணையாக அனல் பறந்த தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, முதல்வா் பழனிசாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியிலும், சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனா். தென்காசி, நான்குநேரி தொகுதிகளில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரியும், சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனா். திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன், புதுச்சேரி, வானூா், செய்யூா், திருப்போரூா் உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் செய்யவுள்ளனா்.
வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள்: தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தவுடன், தொகுதிக்கு தொடா்பில்லாத அனைவரும் வெளியேற வேண்டுமென தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாக்குப் பதிவு வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறுகிறது. இதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தோ்தலில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் திகதி எண்ணப்படவுள்ளன.