மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 550 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சனிக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் 2 போ் உயிரிழந்ததாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்துடன், ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 550 ஆக உயா்ந்துள்ளதாக மியான்மா் அரசியல் கைதிகள் நல அைமைப்பு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களில் 46 போ் சிறுவா்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டதாக இதுவரை 2,751 போ் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் போராட்டக்காரா்களுக்கு ராணுவ ஆட்சியாளா்கள் மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அதற்கு அடிபணியாமல் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்ற என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1 ஆம் திகதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.