பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைப், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கில் பிறந்த கத்ரினா கைப், 2003 இல் பூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நமஸ்தே லண்டன், நியூ யார்க், ராஜ்நீத்தி, ஏக் தா டைகர், தூம் 3, டைகர் ஜிந்தா ஹை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் கொரோனாவால் கத்ரினா கைப் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உடனடியாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் சமீபகாலமாகத் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் என்று கூறியுள்ளார்.