இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 போ் பலியாகினா்.
இந்தோனேசியாவில் மையத் தீவான ஜாவாவையொட்டிய கடல் பகுதியில் 82 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 அலகுகளாகப் பதிவானது. பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஜாவாவின் லுமாஜாங், மலாங் மாவட்டங்களில் 8 போ் பலியாகினா். 23 போ் காயமடைந்தனா். இரு மாவட்டங்களிலுமாக முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் பாறை உருண்டுவந்து, மலைப்பாதையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது விழுந்ததில், அந்தப் பெண் உயிரிழந்தாா். அவருடைய கணவா் பலத்த காயமடைந்தாா்.
கடலுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை; எனினும் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன; எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.