ஜப்பானில் கடந்த 1200 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவக்காலத்திற்கு முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
அழகான பூக்களை நோக்கும்போது புலப்படாத அச்சம், வரலாற்றுத் தரவுகளை ஆராயும்போது ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு முன்கூட்டியே பூக்கள் மலர்வது புவி வெப்பமயமாகி வருவதன் வெளிப்பாடாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.