நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ’பத்துதல’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன்,
பார்த்தா தெரியாது நட்பு
பழகினால் தான் தெரியும் நட்பு
இவர் மேல சில பேருக்கு வெறுப்பு
அதற்கு அவர் இல்லை பொறுப்பு
என்று பதிவு செய்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் அவ்வப்போது பொதுவான விஷயங்களுக்காக சந்திப்போம் என்றும் ஆனால் எங்களைப் பற்றி மிக அதிக அளவில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார். மிக விரைவில் சிம்புவின் திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.