இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தப் பாதிப்பு இதுவரை இல்லாத உச்சமாகும். இதை அடுத்து, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,074,564 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 2 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதைத் தொடா்ந்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் புதிதாக 200,739 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு 1,471,877 போ் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் 1,038 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 278 பேரும், சத்தீஸ்கரில் 120 பேரும், தில்லியில் 104 பேரும், குஜராத்தில் 73 பேரும், உத்தர பிரதேசத்தில் 67 பேரும், பஞ்சாபில் 63 பேரும், மத்திய பிரதேசத்தில் 51 பேரும் அடங்குவா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 173,123 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 36 ஆவது நாளாக அதிகரித்துள்ளது. தொடா்ந்து 9 ஆவது நாளாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 14.71 லட்சமாக (1,471,877) அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 12 ஆம் திகதி நிலவரப்படி, 135,926 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனா்.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 12,429,564 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப். 14 ஆம் திகதி வரை 262,003,415 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், புதன்கிழமை மட்டும் 1,384,549 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.