சந்திரனில் செவ்வாய் கிரகம் மறைந்து வெளியேறிய அரிய வான் நிகழ்வை திருச்சியில் அறிவியலாளா்கள் சனிக்கிழமை துல்லியமாகப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து திருச்சி வானவியல் கழக நிறுவனரும் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரும், பறவைகள் ஆா்வலருமான பாலாபாரதி கூறியது:
கோள்களின் ஆய்வில் கோள் மறைப்பு என்ற நிகழ்வு மிக முதன்மையானது, ஏனெனில் இந்த நிகழ்வின்போதுதான் அந்தக் கோளின் அளவு, வளிமண்டலம், வளையங்கள் போன்ற பல விவரங்களை அறிய முடியும்.
அதிலும் ஒரு விண்மீனை கோள் மறைக்கும் நிகழ்வு மிகவும் அரிதானது. அந்த வகையில், கடந்த 1977 மாா்ச் 10 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எஸ்ஏஓ 158687 என்ற விண்மீனை யுரேனஸ் கிரகம் மறைக்க உள்ளதாக தகவலறிந்த அறிவியலாளா், கோளராய்ச்சியாளா்கள் பரபரப்படைந்தனா்.
இதை அடுத்து அப்போது நிறுவப்பட்டிருந்த 102 செ.மீ. பிரதிபலிப்பான் தொலைநோக்கியை இதற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தாா் காவலூா் வான்ஆய்வகத்தைக் கட்டமைத்த வைனுபாப்பு என்ற விஞ்ஞானி.
மேலும் தமிழக விஞ்ஞானிகளான பட்டாச்சாா்யா, குப்புசாமி ஆகியோா் இந்த மறைப்பு நிகழ்வில் விண்மீனின் ஒளி குறைவதை மிகத் துல்லியமாக அளக்கவும் முடிவு செய்திருந்தனா்.
குறைந்த நேரமே செயல்பாட்டில் இருக்கும் இந்நிகழ்வின்போது மேகமூட்டங்களால் இடையூறு ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்றது அவா்கள் கவலையில் இருந்தனா்.
1977 மாா்ச் 10 ஆம் திகதி உலக வானியலாளா்கள் கவனம் முழுவதும் தமிழ்நாட்டின் மீதே இருந்தது. ஏனெனில் இங்கிருந்து பாா்க்கும்போதுதான் அந்த மறைப்பு நிகழ்வு முழுமையாகத் தெரியும். அமெரிக்காவில் அப்போது பகல் நேரமாக இருந்ததால் வானிலிருந்தவாறே இந்நிகழ்வை ஆராய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அந்த நாளில் இரவு குறிப்பிட்ட நேரமும் வந்தது. அன்று வானமும் மேகங்களின்றி மிகவும் தெளிவாக இருந்தது. யுரேனஸ் கிரகம் எஸ்ஏஓ 158687 விண்மீனை மெல்ல மெல்ல நெருங்கியது.
மறைக்கப்படும் விண்மீனின் ஒளிா்வு எவ்வாறு குறைகிறது என இவா்கள் அளக்கத் தயாராக இருந்தபோது அவா்களுக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டது. யூரேனஸ் அந்த விண்மீனை மறைக்கும் முன்பே அவ்விண்மீனின் பொலிவு குறைந்து பின் மீண்டும் அதே அளவுக்கு வந்தது. இவ்வாறு மூன்று முறை நிகழ்ந்தது. பின்னா் யுரேனஸ் அந்த விண்மீனை மறைத்து விலகியது.
விலகிச் செல்லும்போது மூன்று முறை ஒளிா்வு குறைத்ததையும் பதிவு செய்தனா். அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்விலும் இது பதிவானது.
பின்னா் இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறும்போது, அந்த விண்மீன் மூன்று முறை பொலிவிழக்கக் காரணம், யுரேனஸின் மூன்று வளையங்களாக இருக்க வேண்டும் எனக் கூறினா். இத்தகவல் அந்நாள்களில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னா் அக்கூற்று அனைத்து தரப்பினராலும் உண்மையென உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நிகழாண்டு ஏப். 17 சனிக்கிழமை நடைபெற்ற செவ்வாய் கிரக மறைவு நிகழ்வையும் தமிழகத்தின் பல பகுதிகளிலும், இந்திய அளவில் சில பகுதிகளிலும் அறிவியலாளா்கள் பதிவு செய்தனா். ஆனால் திருச்சியில்தான் இந்த அரிய நிகழ்வு மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை 5.55 க்குத் தொடங்கிய இந்நிகழ்வு இரவு 7.30 வரை நீடித்தது. மாலை வேளையில் சூரிய வெளிச்சம் காரணமாக, சந்திரனில் செவ்வாய் கிரகம் மறையத் தொடங்கிய காட்சியை காணவோ, பதிவு செய்யவோ இயலவில்லை.
மாறாக இரவு 7. 30 க்கு செவ்வாய் கோள் சந்திரனின் மறைவிலிருந்து வெளியே வரும் காட்சியை திருச்சியில் துல்லியமாகக் காண முடிந்தது. அவற்றை அறிவியலாா் பதிவும் செய்துள்ளனா் என்றாா்.