திரையுலகில் தற்போது நெருக்கமாக காதலித்து வரும் ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று தான் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆனால் தங்களின் திருமணம் குறித்து இதுவரை, எந்த ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் இருவரும் வெளியிடவில்லை.
ஆனால் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை அவ்வப்போது இருவரும் இணைந்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது யானை மேல் ஏறி சவாரி செய்யும் நெருக்கமான புகைப்பம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.