தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 48 மாகாணங்களில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 640 டொலா் வரை (சுமாா் ரூ.125,000) அபராதம் விதிப்படுகிறது.
தலைநகா் பாங்காக்கில் அந்த நோய் பரவல் மிக அதிகமாகப் பரவி வரும் நிலையில், திரையரங்குகள், பூங்காக்கள், மதுபான விடுதிகள், நீச்சல் குளங்கள், மசாஜ் மையங்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட வா்த்தகத் துறைகள் மூடப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 57,508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 148 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.