‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.
இவர் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகின்றன. என்றாலும் தமிழ் படங்களில் தொடர்ந்து முக்கிய இடத்தை பிடிக்கவில்லை. மற்ற மொழி படங்களிலும் முக்கிய இடம் பிடிக்கவில்லை.
ஆனால் மலையாளப் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ‘ஹலோ நமஸ்தே’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் எதிர்பார்த்த அளவில் பெரிய வாய்ப்புகள் பாவனாவுக்கு கிடைக்கவில்லை.
இப்போது ‘கோஹினூர்’ என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பாவனா, இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்று பெருமையாக கூறினார். ஆனால் ‘ஒரே ஒரு பாடலுக்கு ஆடுகிறேன்’ என்று அவர் சொல்லவில்லை.
ஒரே ஒரு பாடலுக்கு பாவனா ஆடியுள்ள படத்தின் நாயகன் ஆசிப் அலி. பல படங்களில் இவர் பாவனா தன்னுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அபர்ணா விநோத். என்றாலும் அதை பற்றி கவலைப்படாமல் ஆசிப் அலி கேட்டுக் கொண்டதால் நட்புக்காக ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறாராம்.