ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் சொந்த வீரர்களையே கொன்று குவித்துள்ள சம்பவம் ஐ.எஸ் அமைப்பின் மீதான எரிச்சலை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள கஸ்லானி முகாமில் தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஐ.எஸ் இயக்க தீவிரவாதிகள் தங்கி வருகின்றனர். இவர்களை சரிவர பராமரிக்க முடியாததாலும், இனி இவர்கள் எந்த வகையிலும் தங்களுக்கு தேவைப்பட மாட்டார்கள் என்பதாலும் எந்த இயக்கத்திற்காக அவர்கள் உயிரைக் கொடுத்து தாக்குதல்களில் ஈடுபட்டார்களோ அந்த அமைப்பைச் சேர்ந்த் ஐ.எஸ் தீவிரவாதிகளே அவர்களை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இதே போல் கடந்த வருடம் ஜூன் மாதம் உளவு பார்த்தது உள்ளிட்ட காரணங்களுக்காக 32 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது நினைவிருக்கலாம்.