இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார். இதற்கு ரகுமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து அளித்தார்.
இந்நிலையில், வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் ”ரஹ்மானுக்கு எதிரான பத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிவாங்கு தன்மையுடன் கூடிய மொழி. அவர் அந்தப் படத்துக்கு மத அடிப்படையில் இசை அமைக்கவில்லை. நான் ரஹ்மானிடம் கூறுவது, அவர் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடவுள் நம்பிக்கை அல்லது ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது போன்றவை ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதை இவர்கள் எப்போது புரிந்துக்கொள்ள போகிறார்கள்.