அரசுப் பணியிடங்களில் கடைநிலைப் பணியான, பியூன் வேலைக்கு இந்தியாவின் உத்தரப்பிரெதேச மாநிலத்தில் நிலவும் கடும் போட்டி குறித்த செய்திகள் பிரமிக்க வைக்கின்றன.
அந்த மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? மொத்தம் 23 லட்சம் பேர் !
ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர் போட்டியிடுகிறார்கள் என்று கணக்காகிறது.
இந்த நிலைமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் வேலையில்லாத் திண்ட்டாட்டத்தைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது.
இதில் இன்னும் வேடிக்கையான விஷயம் ( அல்லது வேதனையான விஷயம்) என்னவென்றால், விண்ணப்பித்தவர்களில் பலர் பட்டதாரிகள். சிலர் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்கள் கூட !
விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து நேர்காணல் நடத்த வேண்டுமென்றால், அது நடந்து முடிய நான்காண்டுகள் ஆகும் என்று உத்தரப்பிரதேச அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதுவும் ஒரு நாளைக்கு 2,000 பேர்களை நேர்காணல் செய்தால் !