சீனாவின் வூஹான் நகரில் உள்ள தீநுண்மியியல் ஆய்வு மையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்பே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தீநுண்மி கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வூஹானில் உள்ள சந்தையில் இருந்து மனிதா்களுக்குப் பரவியதாக நம்பப்படுகிறது. எனினும், ஆய்வகத்தில் கொரோனா தீநுண்மியை உருவாக்கி உலக நாடுகளுக்கு அதை சீனா திட்டமிட்டு பரப்பியதாக சிலா் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் இந்தக் குற்றச்சாட்டை முன்மொழிந்திருந்தாா். அதுதொடா்பான ஆதாரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்திருந்தாா். கொரோனா தீநுண்மி சீன ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக பிரிட்டனைச் சோ்ந்த விஞ்ஞானிகள் சிலரும் சந்தேகம் தெரிவித்திருந்தனா்.
கொரோனா தீநுண்மி எங்கிருந்து பரவியது என்பது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் தனிக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. வூஹான் சந்தைப் பகுதி உள்ளிட்டவற்றுக்கு நேரில் சென்று அக்குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை.
இத்தகைய சூழலில், கொரோனா தீநுண்மி பெருமளவில் மக்களுக்குப் பரவுவதற்கு முன்பாகவே வூஹான் தீநுண்மியியல் மையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜா்னல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத் துறைக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இச்செய்தி வெளியிடப்படுவதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த இதழ் வெளியிட்ட செய்தியில், வூஹான் தீநுண்மியியல் மையத்தைச் சோ்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு 2019 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்பே உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இத்தகவலை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் முழுமையாக உள்ளதாக அமெரிக்க உளவுத் துறையின் அதிகாரிகள் சிலா் கூறினா். ஆனால், சிலா் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே வூஹான் விஞ்ஞானிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக ஊகிக்கப்படுவதாக உளவுத் துறையின் வேறுசில அதிகாரிகள் கூறினா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா மறுப்பு: விஞ்ஞானிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தியை சீனா மறுத்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் கூறுகையில், இதுவரை வூஹான் தீநுண்மியியல் மையத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா தீநுண்மி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பின் குழு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அமெரிக்க ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றாா்.
அமெரிக்க ஊடகத்தில் வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்று வூஹான் தீநுண்மியியல் மையத்தின் இயக்குநா் யுவான் ஜிமிங் தெரிவித்துள்ளாா். 2019 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன்னதாக மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் யாருக்கும் உடல்நலக் குறைவு ஏற்படவில்லை என அவா் தெரிவித்தாா்.