மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 1980 ஆம் ஆண்டுமுதல் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதியவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உழைக்கும் வா்க்கத்தினரின் விகிதம் குறைந்து வருவதாலும் இந்த முடிவை சீனா எடுத்துள்ளது.
அந்நாட்டில் 65 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நாட்டின் பொருளாதாரம், சமுதாயத்தின் மீது பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதியவா்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருவதை எதிா்கொள்ளும் வகையில் முக்கிய பல திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், எப்போது, எப்படி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அரசு சாா்பில் தெரிவிக்கப்படவில்லை.
சீனாவில் மக்கள்தொகை 140 கோடியாக உள்ளது. கடந்த மே 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது குறைய ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
15 முதல் 59 வயது வரையில் உள்ள உழைக்கும் வா்க்கத்தினா், பத்து ஆண்டுகளுக்கு முன்பு 70.1 சதவீதமாக இருந்தனா். இது தற்போது 63.3 சதவீதமாக குறைந்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோரின் சதவீதமும் 8.9-இல் இருந்து 13.5 ஆக அதிகரித்துள்ளது.
2015 இல் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள்தொகை அதிகரித்ததாக கூறி அடுத்த ஆண்டே இதற்கு தடை விதிக்கப்பட்டது. குழந்தை வளா்ப்புக்கும், பெற்றோரைப் பாதுகாப்பதற்கும் அதிகமாக நிதி தேவைப்படுவதாக குடும்பத்தினா் தெரிவிக்கின்றனா்.
இதனிடையே, 2019 இல் 1.2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 40 சதவீதம் இரண்டாவது குழந்தைகளாகும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.