பாலிவுட் பல உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் கத்ரீனா கைப் சினிமாவில் இடம் பிடிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார். கத்ரீனா கைப்பின் தாயார் சுஜானி. தந்தை முகமது கைப். இவர்களுக்கு 7 மகள்கள். ஒரு மகன். இதில் கத்ரீனா 5–வது குழந்தை. இவரது சிறுவயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டனர்.
வெளிநாட்டில் பெற்றோருடன் வாழ்ந்த கத்ரீனா, பெற்றோர் பிரிந்த பிறகு, சமூக சேவகியான அவரது தாயார் சுஜானியுடன் பல வெளிநாடுக்கு சென்றார். இதில் அவருக்கு பிடித்தமான நாடு ஹாங்காங் என்றாலும், லண்டனில் இவர் செட்டில் ஆனார். அங்கு மாடலிங் செய்து வந்த கத்ரீனாவை இந்திபட தயாரிப்பாளர் குஸ்தாஸ் மும்பைக்கு அழைத்தார். ‘பூம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் அவருக்கு பெரிதாக அமையவில்லை. புது படவாய்ப்பும் கிடைக்க வில்லை.
எனவே ஆரம்ப காலத்தில் சில மாதங்கள் மும்பையில் தங்கி இருந்து படக்கம்பெனிகளில் படியேறி இறங்கினார். பெரிய வாய்ப்புகள் கிடைக்க வில்லை. படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தன. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது பெரிய பேனர் வைத்து அதில் தனது போன் நம்பரையும் குறிப்பிட்டு இருந்தார். படிப்படியாக மார்க்கெட் ஏறியது.
தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். இப்போது இந்தி பட உலகில் முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவருக்கு தனி அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. முயற்சியால் முன்னணி இடத்தை பிடித்துள்ள கத்ரீனாவுக்கு வெளிச்சம்தான் பிடிக்கும் இருட்டு, பூச்சி என்றால் அலறி துடித்து விடுகிறார்.