2009 இல் மிஸ் சென்னை பட்டம் வென்றவர் சாஹித்யா. கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். 2014 இல் பார்த்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, இயக்கம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிகில் படத்தில் வர்ணையாளராக நடித்தார். இதன்பிறகு தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளின் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
கேரி எட்வர்ஸைத் திருமணம் செய்த சாஹித்யாவுக்கு ஜூன் 1 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் நலமாக உள்ளன. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி எனத் தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது பற்றி இன்ஸ்டகிராமில் சாஹித்யா தகவல் தெரிவித்துள்ளார்.