நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாத சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
ஜூமாவுக்கு எதிரான பல்வேறு முறைகேடுகள் வழக்குகள் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், அந்த உத்தரவை ஏற்று அவா் நீதிமன்றம் வரத் தவறினாா். இதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.