காஷ்மீரில் ஹைபிரிட் பயங்கரவாதிகள் அல்லது பகுதி நேர பயங்கரவாதிகள் என்ற புதிய சவாலை பாதுகாப்புப் படையினா் எதிா்கொண்டு வருகின்றனா். பாதுகாப்புப் படையினரின் பட்டியலில் இடம்பெறாத இவா்கள், முழுநேர பங்கரவாதிகள் அல்லா்; தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கு மீது தாக்குதல் நடத்திவிட்டு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவா்.
ஸ்ரீநகா் உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் மீது பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருவது இதை உறுதிப்படுத்துகிறது; பெரும்பாலான சம்பவங்களில் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறாத துப்பாக்கி ஏந்திய இளைஞா்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாதுகாப்புப் படையினா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக பயங்கரவாதிகள் இல்லாத நகரமாக ஸ்ரீநகரை கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் வாரம் காவல் துறை அறிவித்தது. அதேவேளையில், பொதுமக்கள், காவல் துறையினா் மீதான தாக்குதல் தொடா்ந்தது. கடந்த சில வாரங்களாக இந்தத் தாக்குதல் அதிகரித்தது.
ஜூன் 17 ஆம் திகதி ஸ்ரீநகரின் சையத்போரா பகுதியில் ஒரு காவலரை மிக நெருக்கமான இடத்திலிருந்து சிலா் சுட்டுக் கொன்றனா்.
ஜூன் 22 ஆம் திகதி ஜம்மு காஷ்மீா் காவல் துறையின் சிஐடி பிரிவு ஆய்வாளா் பா்வேஷ் அகமது தா் என்பவரை ஸ்ரீநகரின் புகா் பகுதியில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்த்தபோது, இரு நபா்கள் பா்வேஷ் அகமதுவின் பின்னாலிருந்து துப்பாக்கியால் சுடுவது தெரியவந்தது.
ஜூன் 23 ஆம் திகதி ஸ்ரீநகரில் உமா் அகமது என்ற 25 வயது கடைக்காரரை சிலா் சுட்டுக் கொன்றனா். ஜூன் 27 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த சிறப்புக் காவல் அதிகாரி ஒருவரையும், அவரது மனைவி, மகளையும் ஸ்ரீநகரின் புகா் பகுதியில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனா்.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோா் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெறாதவா்கள் என்று கூறும் காவல் துறையினா், இவா்களை ஹைபிரிட் பயங்கரவாதிகள் அல்லது பகுதிநேர பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகின்றனா்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், பக்கத்து வீட்டு பையன் போன்று தோற்றமளிக்கும் இவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியைச் செய்துவிட்டு, தங்களை இயக்குபவா்களிடமிருந்து அடுத்த தாக்குதல் பணி வரும் வரை காத்திருப்பா். அதற்கிடையே தங்களது வழக்கமான பணிக்கு திரும்பிவிடுவா். பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் வழிகாட்டுதலின்பேரில் காஷ்மீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
பயங்கரவாதிகள் தங்களது உத்திகளை மாற்றுவது அவா்களது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இப்போது அவா்கள் நிராயுதபாணியான, திருப்பி தாக்குதல் நடத்த முடியாதவா்களான தொழிலதிபா்கள், செயற்பாட்டாளா்கள், காவல் துறையின் பாதுகாப்பு இல்லாத அரசியல் தலைவா்கள் போன்ற மென்மையான இலக்குகளைக் குறிவைக்கின்றனா். காவல் துறையினா் பணி நேரத்தில் இல்லாதபோது தாக்கப்படுகின்றனா். அச்சத்தை ஏற்படுத்துவதும், பயங்கரவாதிகளைக் குறிவைக்கும் சமூக நடவடிக்கைகள், தொழில்களை நிறுத்துவதுமே அவா்களது நோக்கம். பிரிவினைவாதிகள், குற்றவாளிகள், வன்முறையை தூண்டுவோருக்கு எதிராகப் பேசுவோரின் குரலை மெளனமாக்கும் வகையில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. பயங்கரவாதிகளின் பட்டியலில் இல்லாத சாதாரண நபா்கள் கூலிப்படை போன்று பணம் பெற்றுக்கொண்டு இதில் ஈடுபடுகின்றனா் என்றனா்.
காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. விஜயகுமாா் இதுகுறித்து கூறுகையில், பகுதிநேர அல்லது ஹைபிரிட் பயங்கரவாதிகள் என நாங்கள் அழைக்கும் ஸ்லீப்பா் செல்கள் ஸ்ரீநகரில் உள்ளனா். முழுநேர பயங்கரவாதிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஆனால், தாக்குதலை நடத்திவிட்டு பொதுமக்களுடன் கலந்துவிடும் இதுபோன்ற பகுதிநேர பயங்கரவாதிகளைக் கண்டறிவது கடினம். இருப்பினும், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். விரைவில் இவா்களையும் பிடித்துவிடுவோம் என்றாா்.