அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கும் நோக்கில், மிருகக் காட்சி சாலையலுள்ள புலிகள், கரடிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து, கலிஃபோா்னியா மாகாணம் சான் ஃபிரான்சிஸ்கோ கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஓக்லாண்ட் மிருகக் காட்சி சாலை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஞ்சா், மோலி எனப் பெயரிடப்பட்ட இரு புலிகளுக்கு முதல்முறையாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடா்ந்து கரடிகள், மலை சிங்கங்கள், மரநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.