பிரிட்டனில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்த நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்தாா்.
முன்னதாக, ஜூலை 19 க்குள் பொதுமுடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் சஜீத் ஜாவித் அறிவித்திருந்தாா். அதன்பிறகு பொது இடங்களில் முகக் கவசம் அணிவதுகூட கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமா் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் பிரதமா் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:
பொதுமுடக்கத் தளா்வின் இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஜூலை 19 ஆம் திகதிக்கு முன்பு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. அரசின் தடுப்பூசித் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி.
அதே நேரத்தில் கொரோனா தொற்று முழுமையாக ஒழிந்துவிடவில்லை என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். வரும் வாரங்களில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கரோனாவுக்கு நடுவே நாம் வாழக் கற்றுக் கொண்டு வருகிறோம்.
கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டுள்ளதால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனையில் சேரும் அளவிலோ அல்லது உயிரிழப்பு ஏற்படும் வகையிலோ பாதிப்புகள் இருக்காது. விரைவில் பொதுமுடக்கத்தை திரும்பப் பெறுவது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றாா்.
திங்கள்கிழமை நிலவரப்படி பிரிட்டனில் 27,714 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 331 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 1,611 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொதுமுடக்கத் தளா்வுகளால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரிட்டன் நிா்வாகம் ஒப்புக்கொண்டாலும், தடுப்பூசி திட்டத்தால் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், உயிரிழப்பும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.