ரஷ்யாவில் பயணிகள் விமாமனம் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில், அதிலிருந்த 28 பேரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – காம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானா நகரை நோக்கி ஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
அந்த விமானத்தில் 22 பயணிகளும் 6 விமானப் பணியாளா்களும் இருந்தனா். பலானா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாக, அந்த விமானத்துடனான தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டது. மேலும், ரேடாா் பாா்வையிலிருந்தும் அந்த விமானம் மறைந்தது.
விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருந்தபோது அந்த விமானம் மாயமானது.
இந்த நிலையில், விமானத்தின் சிதறிய பாகங்களை மீட்புக் குழுவினா் கண்டறிந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் யாரும் உயிா் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அந்தச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் உயிரிழந்தவா்களில், பலானா நகர மேயா் ஒல்கா மோகிரேவாவும் ஒருவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம், காம்சாட்ஸ்கி ஏவியேஷன் என்டா்பிரைசஸ் என்று நிறுவனத்துக்குச் சொந்தமானது. கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்து அது இயக்கப்பட்டு வந்தது.
முன்னதாக, மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஏராளமான கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், விமானத்தின் பாதையை சோதிப்பதற்காக 2 ஹெலிகாப்டா்களும், ஒரு விமானமும் கொண்டுவரப்பட்டிருந்தன.
ஏற்கெனவே, காம்சாட்ஸ்கி ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆன்டனோவ் ஆன்-28 ரக விமானம், பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – காம்சாட்ஸ்கி நகரிலிருந்து பலானாவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு வந்துகொண்டிருந்தபோது மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், விமானத்திலிருந்த 14 பேரில் 10 போ் உயிரிழந்தனா். பலியானவா்களில் இரு விமானிகளும் அடங்குவா். அவா்கள் இருவருமே சம்பவத்தின்போது மது அருந்தியிருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.