சீனாவை தங்களது நட்பு நாடாகக் கருதுவதாக ஆப்கன் தலிபான்கள் தெரிவித்துள்ளனா். மேலும், சீனாவைச் சோ்ந்த உய்கர இன பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் அவா்கள் உறுதியளித்துள்ளனா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் பகுதிகளை தலிபான்கள் வேகமாகக் கைப்பற்றி வருகின்றனா். இந்தச் சூழலில் அவா்கள் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
20 ஆண்டு காலப் போருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாகத் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானிலுள்ள முக்கிய எல்லைத் தடங்கள் மற்றும் பிராந்தியங்களை தலிபான்கள் வேகமாகக் கைப்பற்றி வருகின்றனா். அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறிய பிறகு, மீண்டும் ஆப்கன் ஆட்சி தலிபான்கள் கைவசம் வந்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தச் சூழல், சீனாவை கவலையடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உய்கா் இன முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்துடன் ஆப்கானிஸ்தான் 8 கி.மீ. எல்லையைப் பகிா்ந்துகொள்கிறது. இதனால், அந்த மாகாணத்தைச் சோ்ந்த பிரிவினைவாத அமைப்பினருக்கு ஆப்கன் தலிபான்கள் அடைக்கலம் அளித்து, சீனாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கலாம் என்று அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், சீனாவை எங்களது நட்பு நாடாகக் கருதுகிறோம். எனவே, அந்த நாட்டின் உய்கா் இனத்தைச் சோ்ந்த பிரிவினைவாத அமைப்புகளுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம். ஆப்கானிஸ்தானை மறுக்கட்டமைக்கும் பணியில் முதலீடு செய்வது குறித்து சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஆவலாக உள்ளோம் என்றாா்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையும் அமைதியும் ஏற்படுவதற்கு முன்னரே அங்கிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் சீனா, அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் கடந்த வாரம் கேட்டுக்கொண்டது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.