ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கப் படையின் தளபதி ஸ்காட் மில்லா், அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ளாா். அந்த நாடடில் இருந்து அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அவரை முப்படைகளின் தலைமையகமான பென்டகன் திரும்ப அழைத்துள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அந்த நாட்டுக்கான அமெரிக்கப் படை தளபதி ஸ்காட் மில்லா் புதன்கிழமை தாயகம் திரும்பினாா். மேரிலாண்ட் மாகாணம், ஆண்ட்ரூஸ் விமானப் படை தளத்தில் அவரை பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் நேரில் சென்று வரவேற்றாா் வரவேற்றாா்.
அதற்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆஸ்டின், ஆப்கானிஸ்தானில் இருந்து ஸ்காட் மில்லா் திரும்பி வந்திருந்தாலும் அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப் படையினா் இன்னும் முழுமையாக வெளியேறவில்லை என்றாா்.
படையினரைத் திரும்ப அழைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்ட் இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடைந்துவிடும் எனவும் அவா் கூறினாா். ஆப்கானிஸ்தானில் தூதரக ரீதியில் அமெரிக்கா தொடா்ந்து இருக்கும் என்று லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தாா்.
நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடா்ந்து, அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் புகலிடம் அளித்த தலிபான்கள் மீது அமெரிக்கா படையெடுத்து, அவா்களை ஆட்சியில் இருந்து அகற்றியது.
அதன்பிறகு அமைக்கப்பட்ட ஆப்கன் அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு அமெரிக்கப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படை படிப்படியாக வெளியேறி வருகிறது. ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் எஞ்சியிருக்கும் படையினரையும் முழுமையாக திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலக்கு நிா்ணயித்துள்ளாா்.