விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு ஒரே ஒரு எதிர்ப்பார்ப்பு தான்.
பாரதி-கண்ணம்மா இணைவார்களா என்பது தான். ஆனால் இயக்குனர் அவர்களை ஒன்று சேர்க்க கூடாது என்று இடையில் நிறைய கதைக்களத்தை புகுத்தி வருகிறார்.
இப்போது கூட பாரதி தனது மகளுடன் வெளிநாடு செல்கிறேன் என கிளம்புகிறார். ஆனால் இடையில் ஹேமாவிற்கு உடல்நிலை மோசமாக உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
பிறகு கண்ணம்மா இருந்தால் தான் ஹேமா சரியாவார் என பாரதிக்கு தெரியவர, அவரை அழைக்க பாரதி கிளம்புகிறார். இப்படி ஒரு புரொமோ வெளியாக பரபரப்பின் உச்சமாக கதை செல்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.