நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ராவை 2009-ல் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு 2012-ல் மகனும் 2020-ல் மகளும் பிறந்தார்கள்.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவை மும்பைக் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஆபாசப் படங்கள் தொடர்பான வழக்கை மும்பை குற்றப் பிரிவு காவல்துறை பதிவு செய்தது. ஆபாசப் படங்களைத் தயாரித்து செயலிகளில் வெளியிட்டதில் முக்கியக் குற்றவாளியாக உள்ள ராஜ் குந்த்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.