நடிகை அஞ்சலி குடும்ப பிரச்சினைகளில் இருந்து மீண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜெயம் ரவியுடன், ‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்தார். தற்போது ‘மாப்ள சிங்கம், தரமணி, இறைவி’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் மூன்று படங்கள் கைவசம் உள்ளன.
அஞ்சலி பற்றி கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஒரு தொழில் அதிபரை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன. இவர்களுக்கு குழந்தை இருப்பதாகவும் தகவல் பரவியது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“என்னைப்பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. திருமணம் நடந்துவிட்டதாகவும், குழந்தை இருப்பதாகவும் வதந்திகளை பரப்புகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. திருமணம் உடனடியாக செய்து கொள்ளமாட்டேன். என் முழு கவனமும் இப்போது சினிமாவில்தான் இருக்கிறது. திரையுலகம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது. இங்கு குனிய குனிய குட்டுவார்கள்.
எதிர்த்து நின்றால் ஓடிப்போய்விடுவார்கள். என்னை சுற்றி அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் என் வாழ்க்கை எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்கால திட்டங்கள் என் கையில் இல்லை கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார்”. இவ்வாறு அஞ்சலி கூறினார்.