தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது களில் 1,863,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்த விவரம் : தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி ஜூலை 25 ஆம் திகதி வரை 108 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 18 லட்சத்து 63 ஆயிரத்து 868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 ஆயிரத்து 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8 ஆம் திகதி தொடங்கி ஜூலை 25 ஆம் திகதி வரை 108 நாள்களில் 89 ஆயிரத்து 687 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.